ராசிபுரம்: பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட ரூ.2,500 வழங்கபடுகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் பேசி வருகிறார். நாமக்கல் மாவட்டம் ராசியான மாவட்டம் எனவும் தெரிவித்துள்ளார். ஏழை, எளிய மக்களை காக்கும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.