×

சித்தாமூர் ஒன்றிய பகுதியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு

மதுராந்தகம்: சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் ஒன்றியத்தின் பல்வேறு ஊரட்சிகளில் சுமார் 70 ஆயிரம் மரக்கன்றுகள் தற்போது நடப்பட்டுள்ளன. இங்கு வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பரணி, வீரமுத்து ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

இவர்கள் கடந்த சில மாதங்களாக ஊராட்சி ஒன்றியத்தின் பல பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்தனர். அதன்படி தற்போது 70 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கின்றனர்.குறிப்பாக, சோத்துபாக்கம், மழுவங்கரணை, குரும்பிறை, இந்தலூர், 23 கொளத்தூர், வெடால், கூடலூர், பேரம்பாக்கம் உள்பட பல ஊராட்சிகளில் நாவல், புங்கன், வேம்பு, புளியமரக்கன்றுகள் உள்பட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதனை அந்தந்த ஊராட்சி செயலாளர்கள் மேற்பார்வையில் பணியாளர்கள் பராமரிக்கின்றனர்.

Tags : Chidambaram Union Territory , Siddhamur, saplings
× RELATED சித்தாமூர் ஒன்றிய பகுதியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு