புதுச்சேரி: 2021ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க புதுச்சேரி மக்கள் தயாராகி விட்டனர். தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இந்தாண்டு கொரோனா காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், புதுவை அரசு அனுமதி வழங்கியது. இவ்விவகாரத்தில் கவர்னர்- முதல்வர் இடையே மோதல் நீடித்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டம் தற்போதே களைகட்டத் தொடங்கி விட்டது. ஓட்டல்கள், விடுதிகளில் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
கடற்கரை சாலையில் வசிக்கும் உள்ளூர் வாகனங்கள், எமர்ஜென்சி வண்டிகளுக்கு மட்டும் பாஸ் (சிறப்பு அனுமதி சீட்டு) வழங்கப்படுகிறது. ஓட்டல்கள், உணவகங்கள், பார்களுக்கு வழக்கமான விதிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாகவும் பல்வேறு அறிவுரைகள் கூறி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக புதுவைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.