×

புழல், செங்குன்றம் பகுதிகளில் புறக்காவல் நிலையங்களுக்கு பூட்டு: மீண்டும் திறக்க வலியுறுத்தல்

புழல்: புழல், செங்குன்றம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புழல் கதிர்வேடு, புத்தாகரம், சூரப்பட்டு, லட்சுமிபுரம், ரெட்டேரி, கடப்பா சாலை, டீச்சர்ஸ் காலனி, காவாங்கரை, கண்ணப்ப சாமி நகர், சக்திவேல் நகர், செங்குன்றம், பாடியநல்லூர், நல்லூர், வடகரை, வடபெரும்பாக்கம், கிராண்ட் லைன், பம்மதுகுளம் உள்ளிட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் வடபெரும்பாக்கம், புத்தாகரம், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறை சார்பில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன.

இவற்றில் காவலர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனால், குற்றச் சம்பவங்கள் குறைந்து காணப்பட்டது. ஆனால், தற்போது இந்த புறக்காவல் நிலையங்கள் திறக்கப்படாமல் பல மாதங்களாக பூட்டியே கிடக்கின்றன. இதனால், மேற்கண்ட பகுதிகளில் வழிப்பறி, செல்போன் மற்றும் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, ‘‘புழல் மற்றும் செங்குன்றம் காவல் நிலையங்களில் போதிய காவலர்கள் இல்லாததாலும், பணியில் உள்ள காவலர்கள் அயல் பணிக்கு சென்று விடுவதாலும் புறக்காவல் நிலையங்களை திறக்க முடியாமல் மூடியே கிடக்கின்றன’’ என்றனர்.


Tags : areas ,re-opening , puzhal , redhills , outpost, lock
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் உலர் களம் அமைக்க கோரிக்கை