×

சொர்க்கவாசல் வழியாக 1.25 லட்சம் பேர் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 25ம் தேதி முதல் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வழக்கமாக இரண்டு நாளைக்கு மட்டுமே சொர்க்கவாசல் திறக்கப்பட்டு வந்த நிலையில் இம்முறை ஜனவரி 3ம் தேதி வரை 10 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

அதன்படி வைகுண்ட  ஏகாதசி சொர்க்கவாசல்  வழியாக கடந்த 3 நாட்களில்  1 லட்சத்து 25 ஆயிரத்து 30 பேர் ஏழுமலையானை தரிசித்தனர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் 3 நாள்களில் 9 கோடியே 43 லட்சம் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags : Tirupati, Darshan
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...