×

வெளிநாடுகளில் வேலை இழந்து திரும்பிய தமிழர்களுக்கு பணிவாய்ப்பு வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: வெளிநாடுகளில் வேலை இழந்து திரும்பிய தமிழர்களுக்கு பணிவாய்ப்பு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: வெளிநாடுகளில் இருந்து திரும்பிய தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அந்த பகுதிகளில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டைகளில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சிறிய பின்னடைவுக்கு பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.

இங்கு அவர்களுக்கு பணி வழங்கலாம். காஞ்சிபுரம் மாவட்டம் சூனாம்பேடு, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தையடுத்த வெண்மணியாத்தூர் ஆகிய இடங்களில் புதிய சிப்காட் வளாகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதற்கான பணிகளில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். சுயதொழில் தொடங்க விரும்புவோருக்கு வங்கிகள் மூலமாகவும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலமாகவும் கடன் பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Tamils ,Ramadas , We need to provide employment to Tamils who have lost their jobs abroad and returned: Ramadas insists
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!