×

ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கர சம்பவம் பெற்ற மகனை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற தாய்: வைரல் வீடியோவால் போலீசில் சிக்கினார்

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே, கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால், பெற்ற குழந்தையை, தாய் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார். இந்த வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது. சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கட்சிப்பட்டு, காமராஜ் நகரை சேர்ந்தவர் சித்ரா (20). இவருக்கு திருமணமாகவில்லை. எனினும் கள்ளத்தொடர்பு மூலம் கார்த்திக் (5), அருண் (2) ஆகிய மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சித்ரா, கருமாங்கழனி பகுதியை சேர்ந்த ஆனந்தன் (45) என்பவரை குழந்தைகளின் பாதுகாப்புக்காக திருமணம் செய்து கொண்டார்.

இதைதொடர்ந்து, கடந்த 2 மாதங்களுக்கு முன், சித்ராவின் வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதாகவும், மகன் அருணுக்கு 60 சதவீத தீக்காயங்களுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அவர் இறந்தார். இதுதொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன் ஸ்ரீபெரும்புதூர் அருகே முட்புதரில் ஒரு சிறுவன் தூங்கி கொண்டிருந்தான். இதை பார்த்த பொதுமக்கள், அவனிடம் விசாரித்தனர். தன் தாய் பெயர் சித்ரா, ஆனால் அவருடன் செல்ல மாட்டேன் என்றான். இதனால் உறவினர்களிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட் டான்.

நேற்று முன்தினம் இரவு, ஒரு தாய், தனது குழந்தையை கழுத்தை நெரிக்கும் வீடியோ காட்சி வைரலாக பரவியது. அந்த வீடியோவில் சித்ரா, தனது குழந்தையை கழுத்து நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் மகளிர் போலீசார், தீவிரமாக விசாரித்தனர். அதில், திருமணத்துக்கு முன்பு சித்ராவுக்கு, பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது. அதன் மூலம் 2 பிள்ளைகள் பிறந்தனர். இதையடுத்து அவர், 2 ஆண்டுகளுக்கு முன் ஊர் மக்களுக்கு பயந்து, கருமாங்கழனி கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் (45), என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்தவேளையில், கட்சிபட்டு பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன், சித்ராவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அந்த வாலிபருடன், தனிமையில் இருப்பதற்கு, தனது 2 பிள்ளைகளும் இடையூறாக இருந்தனர். இதனால் 2 பிள்ளைகளையும் கொலை செய்ய சித்ரா முடிவு செய்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து சித்ரா, தனது மூத்த மகன் கார்திக்கை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார். அதை கள்ளக்காதலன், தனது செல்போனில் வீடியோ எடுத்து அதனை தனது நண்பர்களுக்கு அனுப்பினார். அந்த வீடியோ வைரலாக பரவியதால் தனது மகனை கொலை செய்ய முயற்சி செய்த பாசக்கார தாய் போலிசில் சிக்கினார் என தெரிந்தது. தொடர்ந்து போலீசார், வழக்குப்பதிவு செய்து சித்ராவின் 2வது மகன் அருண், தீக்காயமடைந்து இறந்தானா அல்லது மண்ணெண்ணெய் ஊற்றி சித்ரா கொலை செய்தாரா என துருவித் துருவி விசாரிக்கின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள கள்ளக் காதலனை தேடி வருகின்றனர்.

Tags : incident ,death ,Sriperumbudur , Mother tries to strangle her son to death near Sriperumbudur: Police nab viral video
× RELATED சென்னையில் தபால் வாக்குப்பதிவு...