×

7 மாதங்களுக்கு பிறகு சரிவு டெல்லியில் புதிதாக 564 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: தலைநகரில் நேற்று புதிதாக 564 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 7 மாதங்களுக்கு பின்னர் பதிவான மிகக்குறைந்த எண்ணிக்கையாகும். டெல்லியில் நேற்றைய நாளை பொறுத்தவைர நோய் தொற்று பாசிட்டிவ் விகிதம் 1 சதவீதத்திற்கும் குறைவாக பதிவானது. கொரோனாவால் நேற்று 21 பேர் பலியாகினர். நகரில் ஒட்டுமொத்த நோய் பாதிப்பு 6,23,415 ஆக உள்ளது. பலி எண்ணிக்கையும் 10,474 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மொத்தம்  57,463 கோவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில்,32,484 ஆர்டி-பிசிஆர் சோதனைகளும் 24,979 ரேபிட் ஆன்டிஜென் சோதனைகளும் செய்யப்பட்டது. டெல்லியில் தற்போது ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 6,297 ஆக மட்டுமே உள்ளது.  கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 4,563 ஆக குறைந்துள்ளது.


Tags : collapse ,Corona ,Delhi ,newcomers , 7 months after the collapse Corona to 564 newcomers in Delhi
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...