×

கள்ளத்தொடர்புக்கு இடையூறு: குழந்தையின் கழுத்தை தாய் நெரிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்.!!!

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே பெற்ற குழந்தையை கழுத்தை தாய் நெரிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கச்சிப்பட்டு, காமராஜ் நகரை சேர்ந்தவர் சித்ரா(20) என்பவர் கள்ள தொடர்பு மூலம் கார்திக் (5), அருண் (2), என்ற இரண்டு குழந்தையை பெற்றுள்ளார். இருப்பினும், ஆனந்தன் (45) என்பவரை குழந்தைகளின் பாதுகாப்பிற்கு சித்ரா திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இதற்கிடையே, 2 மாதங்களுக்கு முன் சித்ராவின் குழந்தை அருண், வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். தொடர்ந்து, சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சில நாட்களில் மர்மமாக அருண் உயிரிழந்தான். இந்நிலையில் நேற்று இரவு தாய் ஒரு குழந்தையை கழுத்தை நெறிக்கும் வீடியோ காட்சிகள் வைரலாக பரவ தொடங்கியது. இதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தினர் அது குறித்து விசாரணை செய்தனர். இதில் சித்ரா தனது குழந்தையை கழுத்து நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து சித்ராவை கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தியதில், புதிதாக வாலிபருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்புக்கு இடையூறாக குழந்தைகள் இருந்ததால், இரண்டு குழந்தைகளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதன்படி, முதல் குழந்தை கார்திக்கை கழுத்து நெரித்து கொலை செய்ய சித்ரா முயற்சி செய்துள்ளார். இதனை கள்ளக்காதலன் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதனை தனது நண்பர்களுக்கு அனுப்பி உள்ளான். இந்த வீடியோ தற்போது இணைதளத்தில் வைரல் ஆகியுள்ளது.


Tags : baby , Disruption of counterfeiting: Video of mother strangling baby's neck viral on social networking site. !!!
× RELATED பச்சிளம் ஆண் குழந்தை கொல்லப்பட்ட...