×

தனித்து களமிறங்கத் தயாராகிறதா தேமுதிக?.. 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தார் விஜயகாந்த்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து தேமுதிக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் சட்டமன்ற தேர்தலிலும் அந்த கூட்டணி தொடருமா என கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை தேமுதிக நிர்வாக தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களுக்கு கட்சியின் ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, வட்டம், ஊராட்சி, கிளைக்கழக நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். எனவே சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு கூட்டணியில் அதிக தொகுதிகள் ஒதுக்கப்படாவிட்டால் தனித்து களமிறங்கவும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.


Tags : Temutika ,election officials ,constituencies ,Vijayakand , Is Temutika preparing to go it alone? .. Vijayakand announces election officials for 234 constituencies
× RELATED தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில்...