சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை, பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும் என கூறப்பட்டுள்ளது. வங்கக் கடல் பகுதியில் 28 முதல் 30-ம் தேதி வரை பலத்த காற்று வீசும் எனவும் தெரிவித்துள்ளது.