×

மக்கள் சபை கூட்டம்: திரளான மக்கள் பங்கேற்பு

திருப்போரூர்: திருப்போரூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பில் தண்டலம் ஊராட்சியில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர் தலைமை தாங்கினார். தண்டலம் ஊராட்சி செயலாளர் இரவிக்குமார் வரவேற்றார். மாவட்டத் துணை செயலாளர்கள் விஸ்வநாதன், அன்புச்செழியன், திருப்போரூர் நகர செயலாளர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்போரூர் எம்.எல்.ஏ. இதயவர்மன் தி.மு.க. தலைமைக் கழக பிரதிநிதி செங்கை தாமஸ் ஆகியோர் இந்த மக்கள் சபைக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற அ.தி.மு.க. அரசின் அனைத்துத்  துறை ஊழல்கள் அடங்கிய பட்டியல் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் கையொப்பம் பெறப்பட்டது. பின்னர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி பதவி ஏற்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதேபோன்று வடக்கு ஒன்றியத்தில் கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சியிலும் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. 


Tags : People's Assembly Meeting: Mass , People's Assembly Meeting: Mass participation
× RELATED மக்கள் சபை கூட்டம்: திரளான மக்கள் பங்கேற்பு