மும்பை: ஐசிசி கனவு அணியின் மூன்று விதமான போட்டிகளுக்கும் இந்திய வீரர்களே கேப்டன்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் டி 20 மற்றும் ஒரு நாள் போட்டியில் தோனி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டி அணியில் விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய வீரர்கள் தரப்பில் ஐசிசியின் டி20 அணியில் 4 பேரும் ,ஒரு நாள் அணியில் 3 பேரும், டெஸ்ட் அணியில் 2 பேரும் இடம் பிடித்துள்ளனர்.