×

இந்தியாவில் கொரோனா நிலவரம் : பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைவு, குணமாணவர்கள் எண்ணிக்கை உயர்வு

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.47 லட்சத்தை தாண்டியது.  இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக 18,732 பாதித்தவர்கள், 21,430 குணமடைந்தோர், 279 பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 18,732 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,01,87,850 ஆக உயர்ந்தது.
* புதிதாக 279 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,47,622 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 21,430 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 97,61,538 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,78,690 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 95.78% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.45% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 2.77% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 9,43,368 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
* இதுவரை 16,81,02,657 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Tags : Corona ,victims ,India ,healers , India, Corona, the number of victims is low
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...