×

300க்கும் கீழ் குறைந்தது தினசரி பலி

புதுடெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,273 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 1 லட்சத்து 69,118 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 251 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 47,343 ஆக உயர்ந்துள்ளது.

ஏறக்குறைய 6 மாதங்களுக்குப் பிறகு கொரோனா உயிரிழப்பு 300க்கும் கீழாக குறைந்துள்ளது. 97 லட்சத்து 40,108 பேர் குணமடைந்துள்ளனர்’ என கூறப்பட்டுள்ளது.

Tags : At least 300 daily kills
× RELATED தெலங்கானாவில் அமித்ஷா மீது வழக்குப்பதிவு