கோலாகட்: நான் ஓரிரு நாட்களில் பாரதீய ஜனதா கட்சியில் சேரவுள்ளேன் என அசாம் எம்.எல்.ஏ அஜந்தா நியோக் தெரிவித்துள்ளார். கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, காங்கிரசின் முதன்மை உறுப்பினராக இருந்து எம்.எல்.ஏ அஜந்தா நியோக் நேற்று கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், பாரதீய ஜனதா கட்சியில் சேரவுள்ளதாக அஜந்தா நியோக் தெரிவித்துள்ளார். கோலாகட் தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை எம்.எல்.ஏ.யாக அஜந்தா நியோக் உள்ளது குறிப்பிடத்தக்கது.