புதுச்சேரி: துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் தலையீட்டால் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியவில்லை என பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பதிலளித்துள்ளது. புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் குறித்து பிரதமருடன் விவாதிக்கத் தயார் என்றும் தெரிவித்துள்ளார். தொகுதி வரையறை பணிகள் முடியாததால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை என நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார்.