டெல்லி: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் மௌனம் சம்மதம் என்று தான் அர்த்தம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். முதல்வர் வேட்பாளர் பற்றி பிரகாஷ் ஜவடேகர் பதில் அளிக்காமல் சென்றது குறித்த கேள்விக்கு அமைச்சர் டம்பூர் ராஜூ பதிலளித்தார். பாஜகவை பொறுத்தவரை தலைவர் ஜே.பி. நட்டா, பிரதமர் மோடி, அமித்ஷா சொல்வதை தான் ஏற்போம். முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று அமித்ஷா ஏற்றுக் கொண்ட பிறகுதான் கூட்டணி தொடரும் என்று அறிவிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.