கன்னியாகுமரி: மணக்குடி மீனவர் கிராமத்தில் சுனாமி பேரலையில் உயிழந்தவர்களுக்கு நினைவு திருப்பலி நடைபெற்றுள்ளது. மீன்பிடி இறங்கு தளத்தில் மெழுகுவர்த்தி ஏற்றியும் மலர் தூவியும் மீனவர்கள், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர், செருதூர் உள்ளிட்ட நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.