×

ஆடுகள் திருட்டு ஆசாமிகளுக்கு வலை

ஆவடி: திருமுல்லைவாயல் சோழம்பேடு சாலை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார்(35). இவர், ஆடுகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சதீஷ்குமார், வீட்டில்  உள்ள பட்டியலில் 9 ஆடுகளை அடைத்து வைத்திருந்தார். பின்னர், நேற்று காலை அவர் எழுந்து வந்து ஆடுகளை பார்த்துள்ளார். அப்போது, அங்கு இருந்த 4 ஆடுகள் திருட்டு போயிருந்தது. நள்ளிரவில் மர்ம நபர்கள் பட்டியலை திறந்து ஆடுகளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சதீஷ்குமார் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.



Tags : Goat Theft Assamese , Web for Goat Theft Assamese
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...