×

இன்ஸ்பெக்டரிடம் 1 லட்சம் அபேஸ்

துரைப்பாக்கம்: திருவான்மியூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அன்புக்கரசன். இவரிடம் பாலவாக்கம் கிருஷ்ணா நகரை மகேஷ்  பாபு (27) ஓட்டுனராக வேலை செய்து வந்தார். கடந்த ஒரு வாரமாக மகேஷ்பாபு வேலைக்கு வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அன்புக்கரசன் தனது வங்கி கணக்கை சரிபார்த்தபோது அதில் இருந்து கூகுள் பே மூலம் 1.15 லட்சத்தை மகேஷ் பாபு  தனது வங்கி கணக்குக்கு மாற்றியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், திருவான்மியூர் போலீசார் மகேஷ் பாபுவை நேற்று கைது செய்தனர்.

Tags : inspector , 1 lakh apes to the inspector
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு