நெல்லை: தமிழகத்தின் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவனின் உடல் தகனம் செய்யப்பட்டது. நெல்லை மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தொ.பரமசிவனின் உடல் தகனம் செய்யப்பட்டது. நெல்லையில் தொ.பரமசிவனின் உடலுக்கு எழுத்தாளர்கள், கவிஞர்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தொ.பரமசிவன் நேற்று காலமானார்.