×

ரூ.40 ஆயிரத்துக்கு குழந்தை விற்பனை: 5 பேர் கைது

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மாரனேரி சிங்கம்பட்டியை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன் (28). இவரது மனைவி பஞ்சவர்ணம் (24). பட்டாசு ஆலை ஊழியர்கள். இவர்களுக்கு  7 வயதில் மகள், 5, 3 வயதில் மகன்கள் உள்ளனர். இந்நிலையில் பஞ்சவர்ணம் மீண்டும்  கர்ப்பமடைந்தார். பாண்டீஸ்வரன் மனைவி மீது சந்தேகப்பட்டு இந்த குழந்தை என்னுடையது இல்லை என பிரச்னை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பஞ்சவர்ணம் விரக்தியில் இருந்தார். மாரனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸ் முத்துமாரியிடம் பரிசோதனைக்கு சென்றார். அப்போது ஒப்பந்த அடிப்படை நர்சான நாகர்கோவிலை சேர்ந்த அஜிதா, தனது சித்தி தாமரைக்கு  தெரிந்தவருக்கு குழந்தை தேவைப்படுகிறது என கூறியுள்ளார். இதையடுத்து பாண்டீஸ்வரன் குழந்தையை விற்க சம்மதித்துள்ளார்.ஜன. 23ல் பஞ்சவர்ணத்திற்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, பிப். 19ல் பாண்டீஸ்வரன் தம்பதி திருநெல்வேலிக்கு சென்று ஜார்ஜ் தம்பதியிடம் குழந்தையை கொடுத்து ரூ.70 ஆயிரம் பேசி ரூ.40 ஆயிரம் அட்வான்ஸ் வாங்கி வந்தனர். இதைத்தொடர்ந்து பஞ்சவர்ணம் விருதுநகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு பாண்டீஸ்வரனுடன் வந்தார். அங்கு குழந்தையை விற்றது குறித்து தாயுடன் தகராறு நடந்துள்ளது. இதுகுறித்து பஞ்சவர்ணத்தின் தாய், மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிந்து பாண்டீஸ்வரன்,  பஞ்சவர்ணம், சார்லட் ஐரின், செவிலியர்கள் முத்துமாரி, அஜிதா ஆகியோரை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகின்றனர். …

The post ரூ.40 ஆயிரத்துக்கு குழந்தை விற்பனை: 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Pandieswaran ,Maraneri ,Singhambati ,Sivakasi ,Virudhunagar District, Sivakasi ,panjavarna ,
× RELATED சிவகாசி அருகே விதிமீறிய பட்டாசு ஆலைக்கு சீல் வைப்பு: அதிகாரிகள் அதிரடி