×

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 5 பேருக்கு கொரோனா!: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: பிரிட்டனில் இருந்து இதுவரை தமிழகம் வந்தவர்களில் மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஏற்கனவே சென்னையை சேர்ந்தவருக்கு கொரோனா உறுதியான நிலையில் மேலும் 4 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக சென்னை, மதுரையை சேர்ந்த தலா ஒருவருக்கும், தஞ்சையை சேர்ந்த 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : Corona ,Radhakrishnan ,Tamil Nadu ,Britain , UK, Corona for 5, Health Secretary Radhakrishnan
× RELATED நாம் வாக்களித்தால் என்ன மாற்றம்...