கடலூர்: கடலூர் நெய்வேலி அனல் மின்நிலைய விபத்தில் 20 பேர் உயிரிழந்ததற்கு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அமைத்த விசாரணைக்குழு அறிக்கையில் என்.எல்.சி. நிர்வாகம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஜுலை மாதம் 1ம் தேதி நெய்வேலியில் செயல்படும் என்.எல்.சி. அனல் மின் நிலைய இரண்டாவது சுரங்கத்தில் அதிக திறன் கொண்ட பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.