சென்னை: கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
ரத்தம் – வேர்வை – கண்ணீர் மூன்றும்
பிறருக்குச் சிந்துமிடத்தே பெருமையுடைத்து.
மானுடத்துக்கு ரத்தம் சிந்திய
மானுடன் பிறந்தநாள்
இந்த உலகம்
தியாகத்தால் இயங்குவதையே
திரும்பத் திரும்பச் சொல்கிறது.
உலகக் கிறித்துவ சமூகத்துக்கு
என் வணக்கமும் வாழ்த்தும்.
என அவர் தம் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.