×

சென்னையில் சி.பி.ஐ. வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் திருட்டு வழக்குப்பதிவு..!!

சென்னை: சென்னையில் 103 கிலோ தங்கம் மாயமானதில் சி.பி.சி.ஐ.டி. திருட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. 2012-ல் சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சி.பி.ஐ. சோதனை செய்தது. சட்டவிரோத ஏற்றுமதி, இறக்குமதி விவகாரத்தில் 400 கிலோ தங்கத்தை சி.பி.ஐ. பறிமுதல் செய்தது. சி.பி.ஐ. வசமிருந்த 400 கிலோ தங்கத்தில் 103 கிலோ தங்கம் மாயமானதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து திருட்டு வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Tags : CBI ,Chennai , Chennai, 103 kg gold, CPCID, theft case
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...