×

ஆந்திராவில் வங்கி பெண் ஊழியர் பலாத்காரம், கொலை

திருமலை: ஆந்திராவில் வங்கி பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம். அனந்தபூரில் உள்ள அசோக் நகரை சேர்ந்தவர் சினேகலதா. இவர் 16 நாட்களுக்கு முன்பு தர்மாவரத்தில் உள்ள தேசிய வங்கியில் ஒப்பந்த ஊழியராக பணியில் சேர்ந்தார். இதற்காக தினந்தோறும் தர்மாவரம் சென்று வந்தார். இந்நிலையில். நேற்று காலை வழக்கம் போல் வங்கிக்கு சென்றார்.
ஆனால். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால், பெற்றோர் பல இடங்களில் தேடினர். இது குறித்து தர்மாவரம் காவல் நிலையத்தில் புகாரும் அளித்தனர். அதில், ‘வேலைக்கு சென்ற எங்கள் மகள் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவருக்கு  கார்த்தி, ராஜேஷ் ஆகியோர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர்,’ என தெரிவித்தனர்.

ஆனால், போலீசார் புகாரை பெற்றுக் கொண்டு அலட்சியமாக இருந்தனர். இதனால், சினேகலதாவின் பெற்றோர், பெண்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட டிஷா என்ற மொபைல் செயலி மூலம் புகார் அளித்தனர். இந்நிலையில், தர்மாவரம் சாலையின் அருகே உள்ள முட்புதரில், அடையாளம் தெரியாத இளம்பெண் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய விசாரணையில், அது சினேகலதா என தெரியவந்தது. மேலும், அவரை மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து சினேகாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜேஷ் என்ற வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : bank employee ,Andhra Pradesh , Female bank employee raped and murdered in Andhra Pradesh
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி