×

தங்கவயல் தாலுகா பஞ்சாயத்தை பா.ஜ கைப்பற்றும்: நகர தலைவர் கமலநாதன் நம்பிக்கை

தங்கவயல்: மத்திய , மாநில ஆட்சிகளை பா.ஜ கைப்பற்றியது போல் தங்கவயல் தாலுகா பஞ்சாயத்து உள்ளாட்சியையும் பா.ஜ. கைப்பற்றும்” என்று நகர பா.ஜ. தலைவர் கமலநாதன் நம்பிக்கை தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:, ‘‘நாட்டு மக்களின் அமோக ஆதரவினால் மத்திய மற்றும் மாநில ஆட்சியையும் கைப்பற்றி மக்கள் நல அரசை பா.ஜ. செயல்படுத்தி வருகிறது.

தற்போது நடக்க இருக்கும் பஞ்சாயத்து தேர்தலிலும் தங்கவயல் தாலுகா பஞ்சாயத்தையும்  பா.ஜ. கைப்பற்றி கிராம உள்ளாட்சிகளில் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தும். கோலார் தொகுதி எம்.பி. எஸ்.முனிசாமி தொகுதி முழுவதும் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து தொகுதி மக்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக தங்கவயல் முன்னேற்றத்திற்காக அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

எப்போதாவது ஒரு முறை தொகுதி பக்கம் வந்த எம்.பி.யை போல் இல்லாமல் , தங்க சுரங்க புனரமைப்பு, தொழில் பூங்கா அமைப்பது போன்ற வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த தொடர் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார். அவருடைய தொடர் முயற்சியால் நிச்சயம் தங்கவயலுக்கு மீண்டும் பொற்காலம் வரும்.” என்றார்.

Tags : Kamalanathan ,BJP , BJP to capture Thangavayal taluka panchayat: Mayor Kamalanathan hopes
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...