×

மாநில அளவிலான சிலம்பம் போட்டி அரசு பள்ளி மாணவி தங்கம் வென்று சாதனை

திருவொற்றியூர்: மாதவரம் பால்பண்ணை, பெரியசேக்காடு பகுதியில் மாநகராட்சி துவக்கப் பள்ளியில் சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீனிவாசன், கார்த்திக் என்ற இரண்டு பயிற்சியாளர்கள் மூலம் தற்காப்பு கலையான சிலம்பம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில், பெரியசேக்காடு பத்மகிரி நகரை சேர்ந்த ஐடி நிறுவன அதிகாரிகளான பிரேம்குமார் – கவிதா தம்பதியின் மகள் வர்ணிகாஸ்ரீ இப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த ஒரு வருடங்களாக சிலம்பம் பயிற்சி பெற்று மாநில, மாவட்ட, மண்டல அளவில் பல்வேறு சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், மத்தியபிரதேச  மாநிலத்தில் யூத் கேம்ஸ் கவுன்சில் சார்பில், கடந்த 14ம்தேதி முதல் 16ம்தேதி வரை மாநில அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளின் சிலம்பப் போட்டி நடந்தது.  இதில், 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சிலம்ப போட்டியில் சென்னை மாநகராட்சி துவக்கப் பள்ளி மாணவி வர்ணிகாஸ்ரீ சிறப்பாக விளையாடி  வெற்றி பெற்று தங்கப்பதக்கம், சான்றிதழ் பெற்று   சாதனை படைத்துள்ளார். இதையடுத்து, மாதவரம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில்  சிலம்பப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் ராஜசேகர் மற்றும் ஆசிரியர்கள் உள்பட  பலர் பங்கேற்று, மாணவி வர்ணிகாஸ்ரீக்கு பரிசு  வழங்கி பாராட்டினர்….

The post மாநில அளவிலான சிலம்பம் போட்டி அரசு பள்ளி மாணவி தங்கம் வென்று சாதனை appeared first on Dinakaran.

Tags : Shilambam ,Competition Govt School School ,Thiruvottriyur ,Municipal Initial School ,Mathavaram Balpanam, Periyasekadam ,Chilumbam Competition ,School ,Dinakaran ,
× RELATED மாதவரம் மண்டலத்தில் 2 ஆண்டாக...