×

ஸ்ரீரங்கத்தில் இருந்து திருப்பதிக்கு 700 வண்ண மாலைகள்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டிலிருந்து ஆண்டுதோறும் திருப்பதி தேவஸ்தான கோயில்களுக்கு சொர்க்கவாசல் திறப்பு விழாவுக்கு டன் கணக்கில் மாலைகள் தயாரிக்கப்படும் அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு நாளை  வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது.

இதையொட்டி திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் மற்றும் திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கீழ் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உள்பட 20 கோயில்களுக்கு மூலவர், உற்சவர்,  உபயநாச்சியார்கள் மற்றும் சுற்றுச் சன்னதிகளில் உள்ள ஆழ்வார், ஆச்சார்களுக்கு ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டில் பிச்சிப்பூ, சம்பங்கி உள்ளிட்ட பூக்களைக் கொண்டு பல வண்ணங்களில் 700 மாலை தயாரிக்கப்பட்டது. சுமார் ஒன்றரை டன் பூக்களில்  தயாரிக்கப்பட்ட 700 மாலைகளும் திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் மூலம் நேற்று திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags : Srirangam ,Tirupati , 700 colorful garlands from Srirangam to Tirupati
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...