×

மக்கள் செல்வாக்கை அதிமுக இழந்துவிட்டது : தஞ்சையில் முத்தரசன் பேட்டி

தஞ்சை :இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தஞ்சையில் அளித்த பேட்டி:  டெல்லியில் விவசாயிகள் 4வது வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை அழைத்து பேசாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பிளவுபடுத்தும் சூழ்ச்சியை மத்திய அரசு செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழக முதல்வர், இச்சட்டத்திற்கு பாதிப்பு இல்லை என திரும்ப திரும்ப கூறுவதை நிறுத்த வேண்டும். மத்திய அரசை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தமிழக முதல்வர் இருக்கிறார் என்பதை அனைவராலும் உணர்ந்து கொள்ள முடிகிறது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி தஞ்சையில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வரும் 29ம்தேதி பேரணி மற்றும் மாநாடு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் சட்டமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 17 கோரிக்கைகளை இந்திய தேர்தல் பார்வையாளர்கள் குழுவினரிடம் நாங்கள் கொடுத்துள்ளோம். பொங்கல் பரிசாக ₹2,500 வழங்குவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா காலக்கட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் வாழ்வாதாரம் இழந்து நின்றபோது குடும்பத்திற்கு ₹5000 வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. தற்போது குடும்ப அட்டைக்கு ₹2,500 வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளது அதன் பயனை வாக்குகளாக மாற்றுவதற்காக தான் என்பது தெரிகிறது. அதிமுக மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : AIADMK ,interview ,Mutharasan ,Thanjavur , Mutharasan, Interview
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...