×

திடீர் பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்

சென்னை: வில்லிவாக்கத்தில் இருந்து பெசன்ட்நகர் நோக்கி நேற்று மாலை 6.30 மணியளவில் 47ஏ என்ற எம்டிசி பஸ் வந்து கொண்டிருந்தது. இதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். தணிகாச்சலம் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டல் அருகே பேருந்து வந்தபோது சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதில் பஸ்சின் பின்பக்க டயர் முழுவதுமாக பள்ளத்தில் இறங்கியது. இதனை சற்றும் எதிர்பாராத பயணிகள் பீதியடைந்தனர். அனைவரும் அலறியவாறு கீழே குதித்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பிறகு பயணிகளே சேர்ந்து பள்ளத்தில் சிக்கிய பேருந்தை, சாலையில் ஏற்றினர். மேலும் போக்குவரத்து தடைபட்டதால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Tags : abyss , Government bus stuck in a sudden abyss
× RELATED 6 ஆண்டு ஆட்சிக்காலத்தில் புரிந்த சாதனை...