ராமேஸ்வரம் : கொரோனா ஊரடங்கால் 9 மாதங்களுக்கு பிறகு இன்று ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி. அரசு பேருந்து 274 நாட்களுக்கு பிறகு இன்று அரிச்சல்முனைக்கு இயக்கப்பட்டன. இதனால் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் மீனவ மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.