×

அரிவாள்மனையுடன் பொதுமக்களை அச்சுறுத்திய மனநலம் பாதித்த பெண்

விருத்தாசலம்: விருத்தாச்சலம் நகரத்தில் மனநலம் பாதித்தவர்கள் கோயில், பேருந்து நிலையம் மற்றும் முக்கிய வீதிகளில் சுற்றி திரிந்து வருகின்றனர். இந்நிலையில், விருத்தாச்சலம் ஜங்ஷன் ரோட்டில் 40 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், கையில் காய்கறிகளை வெட்ட பயன்படுத்தக்கூடிய, அரிவாள் மனையை கையில் வைத்துக் கொண்டு, நடந்து செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், வெட்ட செல்வதும், மிரட்டும் தொனியில் பேசுவதுமாக அலைந்து திரிந்து கொண்டிருந்தார். தகவல் அறிந்து விருத்தாசலம் போலீசார் வருவதற்குள், மனநலம் பாதிக்கபட்ட பெண் மாயமானார். இதையடுத்து அவர் எங்கு சென்றார், அவர் யார் என்பது குறித்து விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். பெண் கையில் அரிவாள் மனையை வைத்துக் கொண்டு பொதுமக்களை மிரட்டும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Tags : public , Mentally ill woman
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...