சென்னை: கொரோனா ஊரடங்கு தொடர்பாக வரும் 28-ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது பற்றி முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். மேலும் கொரோனா ஊரடங்கு டிசம்பர் 31ம் தேதியுடன் முடியும் நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.