புதுடெல்லி: மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருதான, ‘லெஜியன் ஆப் மெரிட்’ என்ற விருதை அதிபர் டிரம்ப் வழங்கி கவுரவித்துள்ளார். இந்திய-அமெரிக்க உறவை பலப்படுத்தியதற்காகவும், உலகளவில் இந்தியாவை சக்தியுள்ள நாடாக உயர்த்தியதற்காகவும் இந்த விருது அவருக்கு
வழங்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் நேற்று முன்தினம் நடந்த விழாவில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஓபிரைனிடம் இருந்து பிரதமர் மோடி சார்பில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து இந்த விருதை பெற்றுக் கொண்டார். இதேபோல், ஜப்பான் அதிபர் ஷின்சோ அபேவிற்கும் இதே விருது வழங்கப்பட்டது.