×

அரசு வாகனங்களில் எக்ஸ்ட்ரா பம்பர்களை அகற்ற வேண்டும்: சுதந்திர வாகன ஓட்டுனர்கள் சங்கம் மனு

சென்னை: சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூ, முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:  தமிழக போக்குவரத்துத்துறை ஆணையர், அதிகாரிகள்; தமிழக முதல்வரின் பாதுகாப்பு குழு வாகனம்;

முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வாகனத்தில் எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சம்மந்தப்பட்ட வாகனங்கள் சிறு அல்லது பெரும் விபத்தில் சிக்கும் தருணத்தில் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள ஏர்பேக் செயல் இழந்துவிடும்.

தமிழக மக்களுக்காக அயராது பணி செய்யும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க அதிகாரிகள் அக்கறை செலுத்த வேண்டும். மேலும் அரசு வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள எக்ஸ்ட்ரா பம்பர் முறையான அனுமதி பெற்று பொருத்தப்பட்டுள்ளதா என்பதை தமிழக மக்களுக்கு, போக்குவரத்து ஆணையர் விளக்கம் அளிக்க வேண்டும். கூடுதலாக அமைச்சர்கள், போக்குவரத்து ஆணையர் வாகனங்களில் எக்ஸ்ட்ரா பம்பர் ெபாருத்தப்பட்டுள்ள புகைப்படங்களை இம்மனுவுடன் இணைந்துள்ளோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Removal ,Extra Bumpers , Removal of Extra Bumpers in Government Vehicles: Petition of Independent Motorists Association
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...