×

தேசிய விடுமுறை நாட்களில் ரிசர்வேஷன் நேரம் குறைப்பு

சென்னை: தேசிய விடுமுறை நாட்களில் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்குட்பட்ட  முன் பதிவு நிலையங்கள் காலை 8 மணி முதல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: இனிவரும் காலங்களில் ஓணம், பொங்கல், கிறிஸ்துமஸ், தீபாவளி, ரம்ஜான் போன்ற தேசிய விடுமுறை தினங்களில் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்குட்பட்ட அனைத்து முன்பதிவு நிலையங்களும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும். அதன்படி வரும் வெள்ளிக்கிழமை (25ம் தேதி) கிறிஸ்துமஸ் என்பதால் மதியம் 2 மணி வரை மட்டுமே முன்பதிவு நிலையங்கள் இயங்கும். மற்ற பணிகள் ஞாயிற்றுகிழமை கால அட்டவணைப்படி நடைபெறும்.


Tags : holidays , Reduction of reservation time on national holidays
× RELATED பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல்...