சென்னை: ஐஐடி கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசில் அமலில் உள்ள 27 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். ராவ் குழு அறிக்கையை அமல்படுத்தக் கூடாது என்பதை முன்வைத்து தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதை அடுத்து போராடியவர்களை போலீஸார் கைது செய்தனர்.