×

இறந்த வாடிக்கையாளர்கள் பெயரில் மோசடி முன்னாள் வங்கி மேலாளர் உட்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை: இறந்து போன வங்கி வாடிக்கையாளர்கள் பெயரில் ரூ.47.60 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் வங்கி மேலாளர் உட்பட 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இறந்து போன வங்கி வாடிக்கையாளர்கள் பெயரில் ஏடிஎம் கார்டு வழங்கியது போல் ரூ.47 லட்சத்து 60 ஆயிரத்து 900 பணம் எடுத்து மோசடி வழக்கில் போலீசார் முன்னாள் இந்தியன் வங்கி மேலாளர் வினோத்(33), கே.கே.நகர் சூர்யா(எ)நாயுடு(22), திருவள்ளூர் மாவட்டம் கலெக்டர் நகரை சேர்ந்த ரஞ்சித்குமார்(எ) ரஞ்சித்(23) ஆகிய மூன்று பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.


இவர்கள் மீது தொடர் புகார்கள் வந்ததை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்னாள் இந்தியன் வங்கி மேலாளர் உட்பட 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Tags : bank manager ,customers , Three people have been arrested under the Gangs Act, including a former bank manager for fraud in the name of dead customers
× RELATED போலி ஆவணங்கள் தயாரித்து 3...