×

அலையில் சிக்கி ஆசிரியர் பலி

பொன்னேரி:  திருவொற்றியூரை சேர்ந்தவர் வேலு(37). யோகா ஆசிரியர். இவர் யோகா பயிற்சி மாணவர்களுடன்  நேற்று பழவேற்காடு சுற்றுலா வந்தார். படகில் முகத்துவாரம் சென்று கடலில் குளித்துள்ளனர். அப்போது நவீன்(20) என்பவர் அலையில் சிக்கி தத்தளித்துள்ளார். அவரை வேலு காப்பாற்ற முயன்றபோது அலையில் அடித்து செல்லப்பட்டார். படகை ஓட்டி வந்த கண்ணன், நவீனை மீட்டார். இந்நிலையில், மயங்கிய நிலையில் கிடந்த வேலுவை மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். அலையில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட படகு உரிமையாளர் கண்ணனையும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.




Tags : teacher , Velu (37) is from Tiruvottiyur. Yoga teacher. He was on a trip to Fruitland yesterday with yoga training students. Go to the front of the boat and bathe in the sea.
× RELATED தமிழக அரசு பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர்: ராமதாஸ் வலியுறுத்தல்