×

நடிகை ஊர்மிளா ‘கணக்கு’ முடக்கம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பாலிவுட் நடிகையும், சிவசோனா கட்சியின் எம்எல்சியுமான ஊர்மிளா, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளார். அவ்வப்போது அதில் புகைப்படங்களை பதிவிட்டு கருத்துகளை  வெளியிட்டு வந்தார். இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் கடந்த சில நாட்களுக்கு முன் மர்ம நபர்களால் ‘ஹேக்’ செய்யப்பட்டது. அதிர்ச்சியடைந்த அவர் கடந்த 16ம் தேதி மும்பை போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், ‘எனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தின் கணக்கில் எனக்கு  ஒரு மெசேஜ் வந்தது. அதை ஓபன் செய்வதற்காக அந்த பட்டனை கிளிக் செய்தேன்.  அப்போது அதில் சில வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியது.  அதன்படி  குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி உள்ளே சென்ற போது, திடீரென எனது சமூக  வலைதள கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டது’ என்றார்.

அதையடுத்து ஐந்து நாட்களுக்குப் பிறகு, மும்பை குற்றப்பிரிவின் சைபர் செல் தற்போது  தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் 43, 66 மற்றும் 66 (சி) பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக ஊர்மிளாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த அனைத்து புகைப்படங்கள் அடையாளம் தெரியாத ஹேக்கர்களால் நீக்கப்பட்டன. இருப்பினும், சைபர் செல் போலீசார் ஊர்மிளா  கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது கணக்கை  அடுத்த 24 மணி நேரத்திற்குள் மீட்டு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Urmila , Actress Urmila 'Account' freeze
× RELATED அவன் தம்பி