×

கொரோனா விதிகளை மீறி செயல்பட்டதாக சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்டு பின்பு பெயிலில் விடுதலை

மும்பை: கொரோனா வைரஸின் காரணமாக ஓட்டல்கள் தொடங்க மாநில அரசுகள் நிபந்தனையுடன் அனுமதி அளித்து உள்ளது. இருப்பினும், விதிகளை மீறி சில இடங்களில் இரவு வரை ஹோட்டல்கள் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மும்பை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள டிராகன் ஃப்ளை கிளப்பில் அதிகாலை 3 மணியளவில் மும்பை காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
 அப்போது, மும்பை காவல்துறை நடத்திய சோதனையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பாடகர் குரு ரந்தாவா ஆகியோர் அந்த கிளப்பில் நடந்த மீட்டிங்கில் கலந்து கொண்டு இருந்தனர்.

இந்நிலையில், கொரோனா விதிகளை மீறி செயல்பட்டதாகவும், கூட்டமாக கூடியதாகவும், இரவில் நீண்ட நேரம் கிளப்பில் இருந்ததாக கூறி சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்டார்.

பின்னர், கைது செய்யப்பட்ட ரெய்னா பெயிலில் விடுவிக்கப்பட்டார். இதில் 27 ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர். கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக மும்பை காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Suresh Raina ,Corona , Regla de Corona, violada, Suresh Raina, arrestada, liberada
× RELATED தோனியை விட சிஎஸ்கேக்கு இந்த ஆண்டு...