சீர்காழி: சீர்காழி அருகே உள்ள காத்திருப்பு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி கடத்தப்பட்டதாக பெற்றோர் அளித்த புகாரில், தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த விக்னேஷ் (20) என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் பேஸ்புக் மூலம் பழகியுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.