×

தங்கவயல் அரசு பொது மருத்துவமனையில் வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும்: பொது மக்கள் கோரிக்கை

தங்கவயல்: தங்கவயல் அரசு பொது மருத்துவமனையில் முறையான வாகன நிறுத்துமிடம் இல்லாததால், காலியாக இருக்கும் இடத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகுகின்றனர். எனவே இங்கு வாகனம் நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தங்கவயல் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என்பதே பெரும்பான்மை பொதுமக்களின் வேண்டுகோளாக இருந்தது.
எனவே அரசாங்கத்தில் தொகுதி எம்எல்ஏ வலியுறுத்தியதன் பேரில் மருத்துவமனையை மேம்படுத்த முதல்வரின் சிறப்பு நிதியில் இருந்து ₹8 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

அதில் லேப், ஸ்கேனிங் சென்டர், புற நோயாளிகள் பிரிவு, சமையல் கூடம், சலவை கூடம் ஆகியவை கட்டப்பட உள்ளது. அதற்கான பணியும் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்து வருகிறது. ஆனால் அரசு பொது மருத்துவமனையில் முறையான வாகன நிறுத்துமிடம் இல்லாததால், மருத்துவமனை வளாகத்திற்குள் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்டோக்கள் ஒழுங்கு முறை இன்றி தாறுமாறாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே பொது மருத்துவமனை வளாகத்தில் முறையான வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Government ,General Hospital: Public , Goldfields, Hospital, Public, Demand
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை