×

யானை தாக்கி தொழிலாளி பலி

பெங்களூரு:சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டல்பேட்டை தாலுகா குந்தகெரே வனப்பகுதியில் உள்ள கனியனபுரா பகுதியில் கூலி வேலை பார்த்து வந்தவர் பொம்மா (25). கடந்த 2 தினங்களுக்கு முன்பு  வேலைக்கு சென்றவர் திரும்பவில்லை. இது குறித்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை அவர் கனியனபுரா பகுதியில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் அவர் காட்டுயானை தாக்கி இறந்தது  தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குண்டல்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Tags : Elephant, worker, killed
× RELATED ரயில் பயணிகளுக்கு இருக்கை கிடைப்பது...