மும்பை: இங்கிலாந்தில் வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில், இத்தாலி, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா நாடுகளிலும் அது பரவி உள்ளது. இதனால் இங்கிலாந்துக்கு விமான சேவையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் 5ம் தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து விமானம் மூலம் வருபவர்கள் கட்டாயம் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.