டோக்கியோ: ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள அமோரி மாகாணத்தில் நேற்று அதிகாலை 2.23 மணி அளவில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. அமோரி பிரிபெக்சரில் 43 அடி ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவானது. இதனால் மாகாணத்தின் பல இடங்களில் வீடுகள் அதிர்ந்தன. அமோரியன் அருகாமையில் உள்ள ஐவாட் மாகாணத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம், உயிரிழப்பு குறித்த தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.