டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பல தசாப்தங்களாக நீடித்த ஒரு அரசியல் வாழ்க்கையில் பரந்த நிர்வாக மற்றும் நிறுவன அனுபவங்களைக் கொண்டிருந்த மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஸ்ரீ மோதிலால் வோரா ஜி இருந்தார். அவரது மறைவால் வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் இரங்கல் தெரிவித்துகொள்கிறேன். ஓம் சாந்தி என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.